ச. தமிழ்ச்செல்வனின் முதல் ஐம்பது ஆண்டுகள் தமிழ்ச்சிறுகதையின் தடங்கள் - ஒரு இன்றியமையா ஆவணம்
சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய வடிவங்கள். இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதைகள், புதுமைப்பித்தன், கு.ப.ரா, ஜெயகாந்தன், ல.ச.ரா.,அசோகமித்திரன் தொடங்கி, அழகிய பெரியவன், நாஞ்சில் நாடன், அம்பை, சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், பாமா ஆகியோரின் வழியே மலர்வதி,ராம்தங்கம், பெண்ணிய சிறுகதைகள், தாகூரின் சிறுகதைத் தொகுப்பு வரை சிறுகதைகளை, எழுத்தாளர் வாரியாக, வட்டார வழக்கு வாரியாக தேடிப்பிடித்து படித்திருக்கிறேன். மிகச்சிறிய வயதில் எனக்குப் படிக்க எளிதாக இருந்தவை சிறுகதை வடிவங்களே. ஒரு சிறுகதை என்பது படித்து முடித்ததும் வாசகரை ஒரு நிமிடம் சிந்திக்கவோ சிரிக்கவோ வைப்பதாக இருக்க வேண்டும் என்பார் சுஜாதா. அவரது நாவல்களை விட என்னை ஈர்த்தவை சிறுகதைகளே. குமுதத்தில் தீராநதி ஒரு இலக்கிய இதழாக வந்த நேரத்தில் அதில் வெளியான கதைகளைப் படிக்க நான் பட்ட சிரமம் நினைவில் வருகிறது. தாமரையில் வெளியான "தாலியில் பூச்சூடியவர்கள்" இன்றளவும் என்னை பாதிக்கும் ஒரு கதை. சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள "முதல் ஐம்பது ஆண்டுகள் தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்", ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியது. ஒரு விரிவான சமூக...